தீபாவளி என்றால் என்ன?

 தீபாவளி  என்றால் என்ன?


தீபாவளி என்பது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றால் "தீபங்களின் திருவிழா" என்று பொருள். இப்பண்டிகை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பிஜி, கயானா, ஜமைக்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, கனடா போன்ற பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.




தீபாவளி பண்டிகையின் முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்ட முறைகள் மதத்திற்கு ஏற்ப மாறுபடும். இருப்பினும், பொதுவாக, தீபாவளி பண்டிகை என்பது ஒளியின் வெற்றி, தீமை மீதான நன்மையின் வெற்றி, இருளின் மீதான வெளிச்சத்தின் வெற்றி ஆகியவற்றை குறிக்கிறது. இந்த பண்டிகையின் போது, மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வணிகங்களில் விளக்குகள் ஏற்றி, தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்வாழ்வை வரவேற்கிறார்கள்.

தீபாவளி பண்டிகையின் போது பின்வரும் நிகழ்வுகள் பொதுவாக நடைபெறுகின்றன

  • வீடுகள் மற்றும் வணிகங்களில் விளக்குகள் ஏற்றப்படுகின்றன.
  • பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன.
  • புதிய ஆடைகள் அணியப்படுகின்றன.
  • பல்வேறு வகையான உணவுகள் சமைக்கப்படுகின்றன.
  • உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சந்திக்கின்றனர்.
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கான சில வழிகள் பின்வருமாறு

  • வீடுகள் மற்றும் வணிகங்களில் விளக்குகள் ஏற்றவும். தீபாவளி பண்டிகையின் முக்கிய அம்சங்களில் ஒன்று வீடுகள் மற்றும் வணிகங்களில் விளக்குகள் ஏற்றுவது ஆகும். இது ஒளியின் வெற்றி மற்றும் இருளின் மீதான வெற்றியை குறிக்கிறது.
  • பட்டாசுகள் வெடிக்கவும். பட்டாசுகள் வெடிப்பதும் தீபாவளி பண்டிகையின் ஒரு பொதுவான வழக்கம் ஆகும். இது மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தின் உணர்வை வெளிப்படுத்துகிறது.
  • புதிய ஆடைகள் அணியவும். தீபாவளி பண்டிகையின் போது புதிய ஆடைகள் அணிவதும் ஒரு முக்கிய வழக்கம் ஆகும். இது புதிய தொடக்கத்தின் அடையாளமாகும்.
  • பல்வேறு வகையான உணவுகள் சமைக்கவும். தீபாவளி பண்டிகையின் போது பல்வேறு வகையான உணவுகள் சமைக்கப்படுகின்றன. இதில் பொங்கல், தீபாவளி லட்டு, தீபாவளி மிட்டாய்கள் போன்றவை அடங்கும்.
  • உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சந்திக்கவும். தீபாவளி பண்டிகையின் போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சந்திப்பதும் ஒரு முக்கிய வழக்கம் ஆகும். இது மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கத்தின் உணர்வை வெளிப்படுத்துகிறது.
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கான சில சிறப்பு வழிகள் பின்வருமாறு

  • தீபாவளி கதைகள் கேட்கவும், சொல்லவும். தீபாவளி பண்டிகையுடன் தொடர்புடைய பல கதைகள் உள்ளன. இக்கதைகள் ஒளியின் வெற்றி, தீமை மீதான நன்மையின் வெற்றி, இருளின் மீதான வெளிச்சத்தின் வெற்றி ஆகியவற்றை விவரிக்கிறது.
  • தீபாவளி பாடல்களை பாடுவதற்கும், நடனமாடுவதற்கும் நேரம் ஒதுக்கவும். தீபாவளி பண்டிகையுடன் தொடர்புடைய பல பாடல்கள் மற்றும் நடனங்கள் உள்ளன. இவை மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தின் உணர்வை வெளிப்படுத்துகிறது.
  • தீபாவளி பண்டிகையின் நன்மைகளைப் பற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும். தீபாவளி பண்டிகை என்பது மகிழ்ச்சி, சந்தோஷம் மற்றும் நம்பிக்கையின் பண்டிகை ஆகும். இந்த பண்டிகையின் நன்மைகளைப் பற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதற்கான வாய்ப்பை உருவாக்கலாம்.
தீபாவளிப் பண்டிகையானது பல சிறப்புகளை பெற்றுள்ள பண்டிகையாகும். தீபாவளியன்று நீராடுவதை விசேடமாகக் சொல்லப்படுகின்றது. அதாவது “புனித நீராடல்ˮ என்று சொல்லப்படுகின்றது.

நன்மையின் வெற்றி தீமையின் அழிவு என்பதனைத்தான் கிருஷ்ண பகவான் நரகாசுரன் அழிவின் மூலம் உலகத்திற்கு உணர்த்தியுள்ளார்.

தீபாவளியின் சிறப்புகளில் ஒன்றாக சிங்கப்பூரில் தீபாவளிப் பண்டிகையை சிறப்பித்து தபால் தலை வெளியிடப்பட்டுள்ளமையைக் கூறலாம்.

திருமணமான தம்பதியினர் திருமணத்திற்கு பின் வரும் முதல் தீபாவளியைத் தல தீபாவளி என்று சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

தீபாவளி அன்று அனைத்து நதிகள்⸴ ஏரிகள்⸴ குளங்கள்⸴ கிணறுகளிலும் நீர்நிலைகளிலும் கங்கா தேவி வியாபித்து இருப்பதாக ஐதீகம் உண்டு. இன் நாளில் எண்ணை தேய்த்து நீராடுபவர்கள் கங்கையில் நீராடிய புனிதத்தையும்⸴ திருமகளின் அருளையும் பெறுவர்.

தீபாவளிப் பண்டிகையின் தோற்றம் பற்றி இந்துக்கள் மத்தியில் பல்வேறு ஐதீகங்கள் நிலவுகின்றன.

அந்தவகையில் இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் முடித்து நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர் இதனையே தீபாவளியாகக் கொண்டாடுவதாக கருதும் நிலை காணப்படுகின்றது.

யமனை போற்றும் வகையில் தோன்றியதாகவும் கூறப்படுகின்றது. பவிச்சக்கரவர்த்தியைப் போற்றும் வகையில் தோன்றியது என்ற ஐதீகமும் உண்டு.

நரகாசுரன் என்னும் பழைய மரபுக் கதையின் அடிப்படையில் தோன்றியது எனவும் கூறப்படுகின்றது. இதுவே பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நரகாசுரன் கடும் தவத்தினால் பல ஆற்றல்களைப் பெற்றமையால் தானே கடவுளிலும் மேலானவன் என்ற மமதை ஏற்பட்டது. இதனால் தேவர்களையும்⸴ ரிஷிகளையும் கொடுமைப்படுத்தினான்.

இவனது கொடுமைகளைத் தாங்க முடியாமல் தேவர்களும் ரிஷிகளும் தம்மைக் காத்தருள வேண்டுமென மகாவிஷ்ணுவிடம் வேண்டினர்.

வேண்டுதலுக்கிணங்க மகாவிஷ்ணு கண்ணன் அவதாரம் எடுத்து அந்தி சாயும் நேரத்தில் சத்யபாமாவின் உதவியுடன் நரகாசுரனை சம்ஹாரம் செய்தார். இவ்வாறு வதம் செய்த நாளே இருள் நீங்கி ஒளி பெற்ற நாளாக எண்ணி தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது.


தீபாவளி எந்த மாசம்?

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்தாண்டு ஐப்பசி 26ம் தேதி நவம்பர் 12 ஞாற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் விதமாக தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தீபாவளி பண்டிகை என்றால் என்ன?

* (பெ) தீபாவளி = தீபம் + ஆவளி = தீபங்களின் ஆவளி. தீப ஒளித் திருநாள் - நம் மன இருள் அகல, இறை அருள் கிடைக்கக் கொண்டாடும் திருநாள் ஆகும். ஐப்பசி அமாவாசை அன்று கொண்டாடும் ஒரு இந்து பண்டிகை ஆகும். இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.

நரகாசுரன் என்பவன் யார்?

இந்து தொன்மவியலின் படி திருமாலின் வராக அவதாரத்திற்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர் நரகாசுரன் ஆவார். இவர் தன்னுடைய பெற்றோர்களால் தான் மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரம் வாங்கியதாகவும், அதன் காரணமாக திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் பூமாதேவி சத்தியபாமாவாக பிறந்து நரகாசுரனை கொன்றதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.

2023 ல் தீபாவளி எப்போது?

2023 ம் ஆண்டில் தீபாவளி திருநாள் நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி மகாலட்சுமிக்கு உரிய நாளாகவும் கொண்டாடப்படுவதால், அன்றைய தினம் லட்சுமி பூஜை செய்வது விசேஷமானதாகும்.

தீபாவளி எதற்காக கொண்டாடப்படுகிறது

தீபாவளி பண்டிகையின் முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்ட முறைகள் மதத்திற்கு ஏற்ப மாறுபடும். இருப்பினும், பொதுவாக, தீபாவளி பண்டிகை என்பது ஒளியின் வெற்றி, தீமை மீதான நன்மையின் வெற்றி, இருளின் மீதான வெளிச்சத்தின் வெற்றி ஆகியவற்றை குறிக்கிறது.

இந்து மதத்தில், தீபாவளி பண்டிகை என்பது இரண்டு முக்கிய நிகழ்வுகளை நினைவுகூரும் பண்டிகையாகும். முதலாவது நிகழ்வு, இராவணனை அழித்த பின்னர் ராமர் அயோத்திக்கு திரும்பிய நிகழ்வு ஆகும். இரண்டாவது நிகழ்வு, துர்கா பகவதி மகிஷாசுரனை அழித்த நிகழ்வு ஆகும்.

சைன மதத்தில், தீபாவளி பண்டிகை என்பது குடும்ப உறுப்பினர்களை ஒன்றிணைத்து, புதிய தொடக்கத்தை கொண்டாடும் ஒரு பண்டிகையாகும்.

பௌத்த மதத்தில், தீபாவளி பண்டிகை என்பது புத்தர் பிறந்த, முதன்முதலில் போதிமரத்தின் கீழ் தெளிவு பெற்ற மற்றும் மரணத்திற்குப் பிறகு சொர்க்கத்திற்குச் சென்ற நாட்களை நினைவுகூரும் பண்டிகையாகும்.

தீபாவளி பண்டிகை என்பது மகிழ்ச்சி, சந்தோஷம் மற்றும் நம்பிக்கையின் பண்டிகை ஆகும். இந்த பண்டிகை அனைவருக்கும் புதிய தொடக்கத்தை குறிக்கிறது.

ஸ்ரீ கிருஷ்ண பகவான் நரகன் என்ற அசுரனை வதம் செய்தபோது அவனுடைய கடைசி வேண்டுகோளிற்கேற்ப தீபாவளிப்ண்டிகை கொண்டாடப்படுகிறது என்பது ஐதீகம். வட இந்தியாவில் சில இடங்களில் தீபாவளியன்று நரகாசுரனுடைய உருவங்களைக் கொளுத்தி கிருஷ்ண பகவானுடைய வெற்றியைக் கொண்டடுவதுண்டு.

இத்திருநாளிலே எமது அக இருள் ஒழிந்து போக வேண்டுமென்றும்இ அக அழுக்கு இல்லாமல் போக வேண்டுமென்றும் நமது முன்னோர்கள் இக் கொண்டாட்டத்தைக் கொண்டாடினார்கள். நரகாசுரன் கண்ணனால் ஆட் கொள்ளப்பட்டபோது தன்னைப்போல் எல்லோரும் கண்ணன் திருவடிகளை அடையவேண்டுமென்று விரும்பினான். அனால் நம்மவரில் பெரும்பான்மையோர் அன்றைய தினத்தில்தான் குடியும் புலாலும் உண்டு அசுரர்களாக மாறி விடுகிறார்கள். அந்த நிலை மாறி அகத்தில் விளக்கு ஏற்றுவோமாக.

தீபாவளி பட்டாசு

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.
தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம்இ அன்றைய தினம்இ அதிகாலையில் எல்லா இடங்களிலும்இ தண்ணீரில் கங்கையும்இ எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும்இ குங்குமத்தில் கௌரியும்இ சந்தனத்தில் பூமாதேவியும்இ புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.. அன்றைய தினம்இ எல்லா நதிகள்இ ஏரிகள்இ குளங்கள்இ கிணறுகளிலும்இ நீர்நிலைகளும் 'கங்கா தேவி' வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும்இ சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

தீபாவளி எதற்கு கொண்டாடுகின்றோம்?

தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்ளைஇ நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. அவற்றில் சில
ழூ இராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால்இ அந்நாட்டில் உள்ள மக்கள் இராமனை வரவேற்பதற்குஇ தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக இராமாயணத்தில் சொல்லப்படுகிறது.
ழூ கிருஷ்ணன்இ நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போதுஇ அந்த நரகாசுரன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதால்இ தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.
இலங்கையை ஆண்ட இராவணன் சீதையை கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால்இ இராமன் இராவணனை எதிர்த்துப் போராடிஇ இராவணனை அழித்துவிட்டுஇ சீதையை மீட்டு கொண்டுஇ தனது தம்பியான இலட்சுமணனுடன்இ அயோத்திக்கு செல்லும் போதுஇ அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்கஇ நாட்டில் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று இராமாயண இதிகாசத்தில் சொல்லப்படுகிறது.
ழூ சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகெளரி விரதம் முடிவுற்றதும்இ அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டுஇ 'அர்த்தநாரீஸ்வரர்' ஆக உருவெடுத்ததால்இ தீபாவளி கொண்டாடப்படுவதாகஇ ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.
தீபாவளியும் மூடநம்பிக்கைகளும்
தீபா'வலி'யும் தமிழரும்!
உலகில் வாழும் அனைத்து இனங்களும் பல வகையான விழாக்களை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றன. போரில் வெற்றி பெற்ற நாள்இ விடுதலை அடைந்த நாள்இ வருடத்தின் முதன் நாள்இ கடவுளோ அல்லது கடவுளின் தூதரோ பூமிக்க வந்ததாக நம்பப்படுகின்ற நாள் என்று மகிழ்ச்சியையும்இ வெற்றியையும்இ விடுதலையையும் குறிக்கின்ற பலவிதமான விழாக்களை மனித இனம் கொண்டாடி வருகிறது.
ஆனால் தான் தோற்கடிக்கப்பட்டஇ அடிமைப்படுத்தப்பட்டஇ இழிவுபடுத்தப்பட்ட ஒரு நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற ஒரு இனமும் இந்த உலகத்தில் உண்டு. அது வேறு யாரும் அல்ல. கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன்னே வாளோடு தோன்றிய மூத்த குடி என்று தன்னை அறிமுகம் செய்கின்ற தமிழினம்தான் அது. பொங்கல் போன்ற விழாக்களுக்கு கொடுக்காத முன்னுரிமையை தீபாவளிக்கு கொடுத்துஇ தன்னுடைய அடிமை சாசனத்தை ஆண்டு தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்கிற தமிழினமாகிய நாங்கள்தான் அந்த பெருமைக்குரியவர்கள்.
இதோ! இந்த ஆண்டும் தீபாவளி வந்து விட்டது. தமிழர்கள் புத்தாடை அணிந்து கோயிலுக்கு போகிறார்கள். நேரிலும்இ தொலைபேசியிலும் 'தீபாவளி வாழ்த்துக்கள்' சொல்லி மகிழ்கிறார்கள். தமிழர் கடைகளில் தீபாவளி சிறப்பு விற்பனை விளம்பரப்படுத்தப்படுகின்றன. தீபாவளி திரைப்படங்கள் அணி வகுக்கின்றன. தொலைக்காட்சிஇ வானொலி போன்ற ஊடகங்கள் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறன. புத்தக நிறுவனங்கள் தீபாவளி சிறப்பு மலர் வெளியிடுகின்றன. கொண்டாட்டம் களை கட்டுகிறது.
ஆனால் இந்த தீபாவளியின் பின்னணி வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்? எங்களின் மூதாதையர் அழிக்கப்பட்ட நாளைஇ தமிழினம் தோற்கடிக்கப்பட்ட நாளை நாம் கொண்டாடுகிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
அதைப் பார்ப்பதற்கு முன் தீபாவளியை தமிழினத்திற்குள் திணித்த ஆரியப் பார்ப்பனர்கள் தீபாவளி குறித்து சொல்லுகின்ற கதையை சுருக்கமாகப் பார்ப்போம்.
முன்பொரு காலத்தில் ஒரு அரக்கன் இருந்தானாம். அவன் பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டானாம். படைப்புத் தொழிலை செய்வதற்கு பூமி இல்லையே என்று கவலைப்பட்ட பிரம்மா விஸ்ணுவிடம் முறையிட்டாராம். விஸ்ணு பன்றியாக மாறி அரக்கனோடு சண்டை போட்டு அவனை கொன்று பூமியை மீட்டாராம். பூமிக்கு தன்னை மீட்ட பன்றியின் மீதே காதல் வந்துவிட்டதாம். பன்றியும் சரியென்று சொல்ல இருவரும் உறவு கொண்டார்களாம். அதனால் ஒரு பிள்ளை பிறந்ததாம். அவன்தான் நரகாசுரன் என்ற அரக்கனாம். அவன் தவம் செய்து தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றானாம். வரம் பெற்ற அரக்கன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினானாம். கடைசியில் விஸ்ணு கிருஸ்ணனாகவும் பூமாதேவி சத்தியபாமாவாகவும் அவதாரமெடுத்து நராகசுரனோடு போரிட்டார்களாம். கடைசியில் நரகாசுரன் பெற்ற வரத்தின்படி அவனுடைய தாயாகிய சத்தியபாமாவால் கொல்லப்பட்டானாம். அவன் கொல்லப்பட்ட நாள்தான் தீபாவளியாம்.
இப்படி ஒரு ஆபாசமான புராணக் கதையைக் அடிப்படையாகக் கொண்டு இந்த தீபாவளியை ஆரியப் பார்ப்பனியம் தமிழர்களுக்குள் திணித்தது. உருண்டையாக இருக்கின்ற பூமியை எப்படி பாயாக சுருட்டலாம் என்றோஇ பூமியிலே இருக்கின்ற கடலுக்குள் எப்படி பூமியையே ஒளித்து வைக்கலாம் என்றோஇ பூமியாலும் பன்றியாலும் உறவு கொள்ள முடியுமா என்றோ கேள்விகளை எழுப்ப முடியாதபடி தமிழினத்தை மடமைக்குள் தள்ளியது
ஆனால் தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி வேறு. இங்கே நராகசுரன் என்று உருவகப்படுத்தப்படுபவன் யார்? புராணங்களில் அசுரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? இதற்கு பதில் தெரிந்தவர்கள் தீபாவளியை கொண்டாட மாட்டார்கள். தெரிந்த பின்பும் கொண்டாடினால் அவர்கள் சூடு சுரணை உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள்.
பாரத கண்டத்தின் வரலாறு என்பது ஆரிய திராவிடப் போரை அடிப்படையாகக் கொண்டது. திராவிடர்கள் எனப்படுகின்ற தமிழர்கள் ஆண்டு கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பை வந்தேறு குடிகளான ஆரியர்கள் மெது மெதுவாக ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். நில ஆக்கிரமிப்போடுஇ மொழி ஆக்கிரமிப்பும்இ பண்பாட்டு ஆக்கிரமிப்பும் நிகழந்தது. ஆரியர்களின் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து தமிழர்கள் நீண்ட காலம் வீரப் போர் புரிந்தார்கள். இந்தப் போர்கள்தான் புராணக் கதைகளில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போர்களாக வர்ணிக்கப்படுகின்றன.
சுர பானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சுர பானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள். அத்துடன் அசுரர்கள் தெற்கே வாழ்பவர்கள் என்றும் புராணக் கதைகளில் குறிப்பிடப்படுகிறார்கள். கிருஸ்ணனும் சரி அதற்கு முந்தையவனாக சொல்லப்படுகின்ற இராமனும் சரிஇ அசுரர்களை அழிப்பதற்கு தெற்கு நோக்கி படை எடுத்து வந்ததாகவே ஆரியர்களின் புராணங்கள் சொல்லுகின்றன. அசுரர்கள் கறுப்பாக இருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறார்கள். புராணக் கதைகளை ஆரய்ந்த பாரதத்தை சேர்ந்த நடுநிலையான ஆராய்ச்சியாளர்களும்இ மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்களும் அசுரர்கள் என்று திராவிடர்களையே குறிப்பிடப்படுகிறது என்று கூறி உள்ளார்கள்.
ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரை கூறுகின்ற கதையே இராமயணம். அன்று தமிழ் மண்ணை ஆண்ட மன்னன் இராவணனாக உருவகப்படுத்தப்படுகிறான். ஆக்கிரமிப்பு போர் நடத்திய ஆரியர்களின் மன்னனாக இராமன் இருக்கின்றான். தமிழ் மண்ணின் பல பகுதிகளை கைப்பற்றி தமிழ் மன்னர்களை ராமன் வெற்றி கொள்கிறான். கடைசியில் தமிழர்களின் தலைநகரான இலங்கை வரை சென்று பல சூழ்ச்சிகள் செய்து இராவணனையும் கொல்கிறான். இதுதன் இராமயணக் கதை. இராவணனை பேரரசனாகக் கொண்டே அன்று தமிழர்களின் அனைத்து அரசுகளும் இருந்தன என்பதை இராமாயணத்தை ஆராய்கின்ற போது புரிந்து கொள்ள முடிகிறது.
இராவணனின் வீழ்ச்சிக்கு பிறகு சில காலம் கழித்து ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்த தமிழ் மன்னர்களில் ஒருவனே நரகாசுரன். நரகாசுரனும் மற்றைய பல மன்னர்களும் ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்தார்கள்.
கடைசியில் தமிழினத்தை வெற்றி கொண்ட ஆரியர்கள் தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தினார்கள். இன்று விடுதலைப் போராளிகளை ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்வது அன்று ஆரியர்கள் அன்று தமிழினவிடுதலைக்காக போரடியவர்களை அரக்கர்கள் என்று சொன்னார்கள். முறிக்கிய மீசையோடு கம்பீரமாக நின்று தமிழ் மண்ணைக் காக்க இறுதிவரை போராடி தன்னுயிரை ஈந்தவர்களுக்கு கொம்புகளும் கோரமான பற்களும் முளைத்து விட்டன.
தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் ....
தீபாவளி தமிழர்க்கு உரியதன்று!
 தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படுகிறது.
அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும் சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர் ஆதலின் அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.
சமண சமயப் பண்டிகையே தீபாவளி தீபாவளி சமணரிட மிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரன்மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர்.
வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் இயற்கை எய்தி இருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அது முதல் இந்த விழா (தீபம் ஸ்ரீ விளக்குஇ ஆவலி ஸ்ரீ வரிசை; தீபாவலி) மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!
சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பொருத்தமற்ற புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும்இ அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்தமானது அன்று. அன்றியும் இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த பழக்கம். சமணர் கொண்டாடி வந்த மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் தீபாவளி என்பதில் அய்யமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.

Post a Comment

அன்பு வாசகரே! உங்களது கருத்துக்களினை இங்கே பதிவிடுங்கள் பிறரும் படிப்பார்கள்

Previous Post Next Post