சிறுவர் கவி மலர் -03 (2004.10.20)
பாலர் பாடசாலை
வீடு
சொல்லின் கோலம்
மலர்களைப்போல்
நெருப்புப் பெட்டி
பச்சைக்கிளி
பச்சைக் கிளியே வா வா வா
பாலும் சோறும் தின்ன வா
கொச்சி மஞ்சள் பூச வா
கொஞ்சி விளையாட வா !
வட்டமான உன் கழுத்திலே
வானவில்லை ஆரமாய்
இட்ட மன்னர் யாரம்மா
யானறியக் கூறம்மா !
பையப் பையப் பறந்து வா
பாடிப் பாடிக் களித்து வா
கையில் வந்திருக்க வா
கனி அருந்த ஓடி வா !
எழுதிய மருந்து
வயிற்று வலியென வாணர் துடித்தார்
வைத்தியர் உடனே அழைக்கப்பட்டார்
வந்த மருத்துவர் பரிசோதித்தார்
இந்த மருந்தென எழுதித் தந்தார்
எழுதித் தந்த மருந்தை
இரவு படுக்கமுன் எடுத்தாற் போதும்
என்றே கூறிச் சென்றுவிட்டார்
வாணர் மனைவியும் வைத்தியர் சொற்ப்படி
எழுதிய மருந்தை எடுத்துக் கொடுக்க
வாணரும் வாங்கிச் சப்பி விழுங்கினார்
விழுங்கிய வாணர் விடிய எழுந்து
நல்ல மருந்தென வலிசுகம் என்றார்
வைத்தியர் எழுதியத் துண்டை
மடித்துக் கொடுத்த மனைவியும் மகிழ்ந்தாள் .
கற்று முன்னேறுவோம்
ஆனா ஆவன்னா படிப்போம் வா
ஆடிப் பாடி மகிழ்வோம் வா
பேனா பிடித்து வரைவோம் வா
பெரியவர் சொல்லைக் கேட்ப்போம் வா
கூடிப் பந்து அடிப்போம் வா
குழலை ஊதி இசைப்போம் வா
தேடித் கலைத்துப் பிடிப்போம் வா
தேகப் பயிற்சி செய்வோம் வா
வானின் சுடராய் திகழ்வோம் வா
வண்ண நிலவாய் குளிர்வோம் வா
தேனின் இனிப்பாய் உரைப்போம் வா
தீங்கை வெட்டிப் புதைப்போம் வா
எண்ணத்தில் உயர்வாய் இருப்போம் வா
எங்கள் ஈழம் காப்போம் வா
திண்ணம் கொண்டோம் திடமாய் வா
திருத்திய வாழ்வு அமைப்போம் வா
கடிதமும் கதையும்
படலையில் என்ன மணிச்சத்தம்
பார் பார் தம்பி பார் தம்பி
படலையில் டிங் டிங் மணிச்சத்தம்
பார்த்து வருகின்றேன் அப்பா
கடிதம் வந்தது பிடியுங்கள்
கடிதம் பிரிச்சுப் படியுங்கள்
வடிவாய்ப் படிச்சுப் பாருங்கள்
வந்த புதினம் சொல்லுங்கள்
மாமா போட்ட கடிதம் பார்
மச்சான் அத்தை நற்சுகமாம்
நிலா பரீட்சையில் சித்தியாம்
சித்திரைக்கு வருவோமாம் ?
வேறு புதினம் இல்லயாம்
இத்துடன் மடலின் நிறைவாம்
மார்கழிக்கு முன் முடிவை மடலில்
மகிழ்வுடனே அனுப்புவாதம் .
அறிந்திடுவோம் குறியீடுகளை
"ஆலயம் தொழுவதும் சாலவும் நன்று "
ஔவையார் சொன்னார் அறிவீரோ ?
காலையும் , மாலையும் கடவுளைத் தொழுதால்
காரியம் கைப்படும் தெரிவீரோ?
நாளைய உலகில் நல்லவை ஆற்றும்
தம்பியரே ! அன்புத் தங்கையரே !
வேளை வருகையில் வெற்றிகள் காண
வேண்டும், வேண்டும் சிறுவர்களே !
உலகம் என்னும் உருண்டைப் பந்தை
உயிர்களுக்காக்க இறைவன் தந்தாரே !
கலகம் செய்தால் காரியம் கெடுமே -ஆதலால்
கருணை காட்டி வாழ்ந்திடுவோம் .
நாங்கள் நாளை
ஆடியும் பாடியும் மகிழ்ந்திடுவோம் -நாம்
அனைவரும் ஒன்றாய்க் கூடிடுவோம்
தேடித் தேடி படித்திடுவோம் -எம்
தேவைகளை நாம் நிறைவு செய்வோம்
அன்னையும் தந்தையும் தெய்வமென்ற அந்த
ஔவையின் சொல்லை உணர்த்திடுவோம்
முன்னோர் வழிகளில் நடந்திடுவோம் -எம்
முதியவருக்கு கை கொடுத்திடுவோம்
கல்வியை போதிக்கும் ஆசிரியர் தன்னை
கண்ணியமாகப் போற்றிடுவோம்
சொல்வதைக் கேட்டு உயர்ந்திடுவோம் -நாம்
சுதந்திரமாய் மண்ணில் வாழ்ந்திடுவோம் .
ர , ற கற்போமா?
அரை மனத்தோடு கற்காதே
அறிவுன் மனதில் நிற்காதே
அறையினில் குந்தி இருக்காதே
அவமாய்ப் பொழுதை கழிக்காதே
குரைக்கும் நாயிடம் அணுகாதே
குனிந்து கல்லெடுத்தெறியதே
குறை எவரிடமும் கேட்காதே
குணம் கெட்டொழிந்து போகாதே
உரைத்தால் உன்செவி ஏற்காதோ
உள்ளக் கருமை வெளுக்கதோ
உறைக்கச் சொன்னால் வலிக்காதோ
உலகம் உயர்வது தெரியாதோ
இரையை எறும்புகள் சோம்பலின்றி
என்றும் சேர்ப்பதை நீயறிவாய்
இறை உனக்கறிவைப் போதிக்க
இத்தனை தந்தான் உணர்ந்திடுவாய்
ல,ள ,ழ படிப்போம் வா...
நீரை பேணுவோம்
பிறர்க்கு உதவுவோம்
இரக்கம்
தம்பி உனக்கு